உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு ரூ.5,500 அபராதம்

Published On 2022-12-05 15:11 IST   |   Update On 2022-12-05 15:12:00 IST
  • பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.
  • கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்து வதற்கு தடை விதிக்கப்ப ட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் யாராவது தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தி வருகின்றனரா? என அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகள், கோத்தகிரி நகர் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை மேற்கொண்டனர்.

கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையிலான அலுவலர்கள் கோத்தகிரி கடைவீதி, டானிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை ெசய்தனர்.

இதில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரி களுக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

Similar News