உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷக் குப்தா ஆய்வு செய்தார்.

திண்டிவனம் பகுதியில் அதிக விபத்தினை தடுப்பதற்கு உயர்கோபுர மின் விளக்கு

Published On 2022-06-17 09:53 GMT   |   Update On 2022-06-17 09:53 GMT
  • திண்டிவனம் பகுதியில் அதிக விபத்தினை தடுப்பதற்கு உயர்கோபுர மின் விளக்குகள் ,திண்டிவனம் உட்கோட்டம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷக் குப்தாவால் ஆய்வு செய்யப்பட்டது.
  • விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ரோசனை மற்றும் ஒலக்கூர் போலீசாரிடம் அறிவுறு த்தினார்.

விழுப்புரம்:

திண்டிவனம் உட்கோட்டம் போலீஸ் டி.எஸ்.பி. அபிஷக் குப்தா திண்டிவனம் உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அதிகம் விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.

அதாவது திண்டிவனம் பாதிரி ஜங்ஷன், கூச்சி கொளத்தூர் ஜங்ஷன், சாரம் பி.டி.ஓ. ஆபீஸ் ஜங்ஷன், சலவாதி ஜங்ஷன் ஆகிய பகுதிகளை அவர் பார்வையிட்டார். மேலும் மேற்படி இடங்களில் விபத்துகள் நடக்காத வண்ணம் அந்த இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு மற்றும் பேரிகார்டு மற்றும் பிளிங்கர் லைட் ஆகியவற்றின் மூலம் விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ரோசனை மற்றும் ஒலக்கூர் போலீசாரிடம் அறிவுறு த்தினார்.

Tags:    

Similar News