உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் ரோஜா மலர்களின் அணிவகுப்பை ரசிக்கும் சுற்றுலாபயணிகள்

Published On 2023-03-28 09:05 GMT   |   Update On 2023-03-28 09:05 GMT
  • வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பர்.
  • 5 அடுக்குகளைக் கொண்ட இந்த ரோஜா தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழக மக்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அவர்களின் முதல் விருப்பமாக நீலகிரி மாவட்டம் தான் இருக்கும். இயற்கையின் மொத்த அழகையும் அங்கு கண்டு வியந்து ரசிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பர்.

இந்த நிலையில், தெற்கா சியாவில் புகழ்பெற்ற ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள ரோஜாக்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நிலா மாடம், புல் மைதானம், நீரூற்று, போன்ற இடங்களைக் கண்டு ரசித்து வருகின்றனர். 5 அடுக்குகளைக் கொண்ட இந்த ரோஜா தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.

பூங்காவின் மேற்புரம் மே மாதத்தில் பூக்கள் பூக்கும் வண்ணம் செடிகள்கவாத்து செய்யபட்டு உள்ளதால் மேல் அடுக்கில் பூக்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்

ஆனால் அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் கீழ் அடுக்குகளில் உள்ள செடிகளில் ரோஜா பூக்கள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.

சிறப்பு மிக்க இந்த பூங்காவில் தற்போது பூத்துக்கு லுங்கும் ரோஜா க்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

ஊட்டியில் ரோஜா க்களின் அணிவகுப்பை காண குவியும் சுற்றுலா பயணிகள் ரோஜாமலர்கள் மனதிற்கு புத்துணர்வு அளிப்பதாக மகிழ்சி தெரிவித்தனர்.

Tags:    

Similar News