உள்ளூர் செய்திகள்

கும்பக்கரை அருவி (கோப்பு படம்)

தொடர் விடுமுறையால் கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-10-07 05:11 GMT   |   Update On 2022-10-07 05:11 GMT
  • 20 நாட்களுக்குமுன்பு வரை பெய்த தொடர் மழை காரணமாக சீரான தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
  • குளிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாலும் உள்ளூர் மக்களும் நண்பர்களுடன் வந்து ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 20 நாட்களுக்குமுன்பு வரை பெய்த தொடர் மழை காரணமாக சீரான தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் வந்து நீராடி செல்கின்றனர். காலை 8 மணிக்கே மக்கள் கூட்டம் வரத்தொடங்கியுள்ளது.

அருவியில் தண்ணீர் சீராக வருவதாலும், பல மாதங்களுக்கு பிறகு குளிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாலும் உள்ளூர் மக்களும் நண்பர்களுடன் வந்து ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர். இதனால் அருவி பகுதியில் கூட்டம் அலைமோதி வருகிறது.

Tags:    

Similar News