உள்ளூர் செய்திகள்

5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்களார்கள் 12.27,302 பேர்

Published On 2023-10-27 15:52 IST   |   Update On 2023-10-27 15:52:00 IST
  • தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமட்ற தொகுதிகளில் மொத்தம் 12, 27, 302 வாக்களார்கள் உள்ளனர் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
  • வரைவு வாக்களர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தருமபுரி மாவட்ட வரைவு வக்காளர் பட்டி–யலை இன்று காலை கலெக்டர் சாந்தி வெளி யிட்டார். அதில் கூறியிருப்பதாவது;-

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல்-2024 -ன்படி பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 182 வாக்குச் சாவடி மையங்கள், வாக்கா–ளர்களாக 1,19,277 ஆண்க–ளும், 1,16,349 பெண்களும், 17 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,35,643 வாக்காளர்கள் உள்ளனர்.

பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் வாக்கா–ளர்களாக 1,25,361 ஆண்க–ளும், 1,16,780 பெண்களும், 9 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,42,150 வாக்காளர்கள் உள்ளனர். தருமபுரி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்க ளாக 1,29,383 ஆண்களும், 1,26,566 பெண்களும், 98 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,56,047 வாக்காளர்கள் உள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதியில் வாக்காளர்க ளாக 1,27,049 ஆண்களும், 1,25,908 பெண்களும், 15 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,52,972 வாக்கா ளர்கள் உள்ளனர்.

அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்க ளாக 1,20,752 ஆண்களும், 1,19,716 பெண்களும், 22 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,40,490 வாக்கா ளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் 5 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 885 வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர்க–ளாக 6,21,822 ஆண்களும், 6,05,319 பெண்க ளும், 161 மூன்றாம் பாலினத்த வர் என மொத்தம் 12,27,302 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 1489 வாக்குசாவடி நிலைய அலுவலர்கள் உள்ளனர்.

சிறப்பு சுருக்க திருத்தம் -2024-ல் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது முகவரி மாற்றம் தொடர்பாக 27.10.2023 முதல் 9.12.2023 வரை விண்ணப்பம் செய்யலாம். மாவட்டத்தி–லுள்ள 885 வாக்குச்சாவடி மையங்க ளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை படிவங்கள் பெறப்படும். 5.1.2023 முதல் 30.9.2023 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி 12,676 படிவங்கள் பெறப்பட்டு அதில் 11,704 படிவங்கள் ஏற்று கொள்ளப்பட்டது.

5.1.2023 முதல் 30.9.2023 வரை 21,141 படிவம்-7 வரப்பெற்றது. அதில் 20,908 படிவங்கள் ஏற்கப்பட்டது.

சிறப்பு சுருக்கத் திருத்தம்-2024ன்படி, சிறப்பு முகாம் ஆனது எதிர்வரும் 4.11.2023, 5.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி களிலும் நடைபெறுகிறது. 1.1.2024 என்ற தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க கோரி விண்ணப்பிக்க–லாம். (31.12.2006 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த நபர்கள்)

1.1.2007 முதல் 31.12.2007 வரை பிறந்த தேதியை கொண்ட 17 வயது நிரம்பிய நபர்களும் அட்வான்ஸ் பில்லிங்-ஆக விண்ணப்–பிக்கலாம், ஆனால் 1.4.2024, 1.7.2024, 1.10.2024 ஆகிய தகுதி நாட்களில் எந்த தேதி களில் தனியரின் வயது-18 பூர்த்தி அடையும் பொழுது தான் விண்ணப்பங்கள் பரிசீல னைக்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) அசோக்குமார், வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Similar News