உள்ளூர் செய்திகள்
மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை கடைசி நாள்
- மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
- மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பரில் தொடங்கியது.
திருப்பூர் :
வீடு, விசைத்தறி, குடிசை, கைத்தறி, விவசாயம்ஆகிய 5 வகை மின் இணைப்புகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 25 லட்சத்து 88 ஆயிரத்து 195 மானிய வகை மின் இணைப்புகள் உள்ளன.மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பரில் தொடங்கியது. 2முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை 15ந்தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது. இன்னும் இரு நாட்களே மீதியுள்ள நிலையில் இதுவரை இணைக்காதவர்கள் ஆன்லைன் வாயிலாகவோ, மின் வாரிய அலுவலகங்களிலோ உடனடியாக இணைக்க, மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.