உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் நாளை மதுக்கடைகள் மூடப்படும்

Published On 2023-04-03 15:25 IST   |   Update On 2023-04-03 15:25:00 IST
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார்கள் அனைத்தும் நாளை மூடப்படும்
  • உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகாவீர் ஜெயந்தி தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) மது விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்கு உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார்கள் அனைத்தும் நாளை மூடப்படும்.

இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News