களக்காடு, பணகுடி பகுதிகளில் நாளை மின்தடை
- வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு மற்றும் பணகுடி நாளை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது
வள்ளியூர்:
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களுக்கு நாளை (15-ந் தேதி) மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.மேலும் மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளை கள் போன்றவற்றை அகற்றி மின்பாதையினை பராமரிக்க ஒத்துழைப்பு தரும்படி பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் பணகுடி பகுதிக்குட் பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்ப வனம், குமந்தான்,காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை,கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்கள்.களக்காடு பகுதிக்குட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம்,கருவேலன்குளம்,கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள். இந்த தகவலை வள்ளியூர் மின்வாரிய செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்தார்.