உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

Published On 2023-03-22 15:32 IST   |   Update On 2023-03-22 15:32:00 IST
  • சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 475 கிலோ பெங்களூரில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
  • போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்து பிரேம்ராமை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 475 கிலோ பெங்களூரில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்ராம் (வயது 24) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்து பிரேம்ராமை கைது செய்தனர்.

Similar News