உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் புகையிலை பொருட்கள் விற்றவர்கள் கைது

Published On 2023-01-11 14:45 IST   |   Update On 2023-01-11 14:45:00 IST
  • புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர்.
  • கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது இதனை தொடர்ந்து கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீசார் புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கோத்தகிரி கப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையிலும் பாண்டியன்பர்க் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலும் புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து அங்கு சென்ற போலீசார் அந்த கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்ததாக கப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் கோத்தகிரி கார்செலி பகுதியை சேர்ந்த ரமேஷ் தாவுத் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags:    

Similar News