உள்ளூர் செய்திகள்

பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட சப் -இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் - 2 பேர் கைது

Published On 2022-08-14 06:11 GMT   |   Update On 2022-08-14 06:11 GMT
பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட சப் -இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்:

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சிலர் பெண்களை கேலி, கிண்டல் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது23), விஜயகுமார்(29) ஆகிய இருவர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து, மணிகண்டன், விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News