உள்ளூர் செய்திகள்
முதியோர் உதவித்தொகை உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
- முதியோர் உதவித்தொகையாக தற்போது 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
- மகளிர் உரிமைத்தொகை இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகையை 1,200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதேபோல், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான மாத ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை 1000 ஆயிரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதியோர், கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கான உயர்த்தப்பட்ட மாத ஓய்வூதியம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.