உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவிலில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை

Published On 2022-07-04 07:38 GMT   |   Update On 2022-07-04 07:38 GMT
  • திருமணத்திற்கு பெண் அமையாததால் மன வருத்தம் அடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
  • வெள்ளகோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரம், அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35) . விசைத்தறி தொழிலாளி .இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

பல இடங்களில் பெண்பார்த்தும் அமையாததால் மன வருத்தம் அடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் 3ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தாயார் லட்சுமி (வயது68) வேலைக்கு சென்று விட்டார். பிறகு இரவு வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் விட்டத்தில் கயிறு போட்டு மகன் மணிகண்டன் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதைப்பார்த்த தாயார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெ.ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News