- மது போதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ் கரன் (வயது 52), இவர் சென்னையில் லாரி, கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
இவர். மனைவியை பார்ப்ப தற்காக அவ்வப்போது வருவார். 4 அல்லது 5 நாட்கள் தங்கி விட்டு மீண்டும் சென்னைக்கு சென்று விடுவார். லட்சுமி கூலி வேலைக்கு சென்று மகன்களை படிக்க வைத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல் லாதபோது பாஸ்கரன் மது அருந்திவிட்டு அறையில் உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் பாஸ்கரனின் தாய் அக்கம்பக் கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாஸ்கரன் தூக்குப்போட்டு கொண்டது தெரிய வந்தது.
உடனடியாக அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பாஸ்கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.