உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

Published On 2023-03-26 14:16 IST   |   Update On 2023-03-26 14:16:00 IST
  • பஸ்சை முந்தி செல்ல வழி விடாததால் ஆத்திரம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

ஜமுனாமரத்தூர்- அமிர்தி நோக்கி கடந்த 23-ந் தேதி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சுக்கு பின்னால் வாளதொம்பை கிராமத்தை சேர்ந்த சின்னப்பை யன் என்பவரின் மகன் ரமேஷ் (வயது 25) மோட்டார் சைக் கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பஸ்சை முந்தி செல்ல முயன்று பலமுறை ஹாரன் அடித்துள்ளார். மலைபாதை என்பதால் பஸ் டிரை வரால் வழிவிட முடியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அமிர்தி அருகே உள்ள ஆற்றின் தரை பாலத்தில் பஸ் மெதுவாக சென்ற போது பஸ் மீது அவர் கற்களை வீசியுள் ளார். அப்போது பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இது குறித்து பஸ் கண்டக்டர் திருப்பதி ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்க குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

Tags:    

Similar News