உள்ளூர் செய்திகள்

செய்யாறு அருகே தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

Published On 2023-05-08 08:00 GMT   |   Update On 2023-05-08 08:00 GMT
  • மாங்காய் பறித்த போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள ஆராத்திரி வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 46). இவர் சென்னையில் கண்ணகி நகரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று பிரகாசம் அவரது தம்பி மோகன் இருவரும் சொந்த கிராமமான ஆராத்திரி வேலூருக்கு வந்தனர். பிரகாசம் அவரது வீட்டில் இருந்த மாங்காய் மரத்தில் மாங்காய் பறிப்பதற்கு வீட்டு மாடியில் ஏறினார்.

மாங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது மாடியில் இருந்த மின்சார ஒயரில் தவறுதலாகபட்டது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பிரகாசம் இறந்தார்.

இதுகுறித்து பிரகாசம் மனைவி திலகவதி மோரணம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News