உள்ளூர் செய்திகள்

தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை

Published On 2022-07-01 15:47 IST   |   Update On 2022-07-01 15:47:00 IST
  • மனைவி மது குடிக்க பணம் தராததால் விரக்தி
  • போலீசார் விசாரணை

தூசி:

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 35). கூலி தொழிலாளி.

இவரது மனைவி சாவித்திரி. இவர் செய்யார் சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். விஜயகுமார் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் சாவித்திரி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது விஜயகுமார் பணம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார். அதேபோல் சிறிது நேரத்தில் துணி துவைக்க வைத்திருந்த ரசாயனத்தை எடுத்து குடித்துவிட்டு கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாவித்திரி மற்றும் குடும்பத்தினர் விஜயகுமாரை மீட்டு செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News