உள்ளூர் செய்திகள்

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

Published On 2022-12-30 09:41 GMT   |   Update On 2022-12-30 09:41 GMT
  • சாலையின் குறுக்கே வந்த நாய் மீது பைக் மோதி விபத்து
  • கன்னியாகுமரியை சேர்ந்தவர்

வந்தவாசி:

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டத்துக்குட்பட்ட கல்லக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை போவாஸ் . இவரது மனைவி அஜந்தா (வயது 48). இவர் வந்தவாசியில் உள்ள தனது மகள் கிரேஸ்லினை பார்க்க கன்னியாகுமரியில் இருந்து பஸ்சில் மேல்மருவத்தூருக்கு நேற்று முன்தினம் காலை வந்தார். அவரை அங்கிருந்து மருமகன் ரமேஷ் மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு வந்தவாசிக்கு வந்து கொண்டிருந்தார்.

வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில், சாலவேடு கிராமம் அருகே செல்லும்போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அஜந்தா நிலைத்தடு மாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து துரை போவாஸ் அளித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News