உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2023-03-07 09:27 GMT   |   Update On 2023-03-07 09:27 GMT
  • அம்மா வீட்டிற்கு நீ செல்லக்கூடாது என கணவன் தடுத்ததால் விரக்தி
  • போலீசார் விசாரணை

போளூர்:

போளூர் அருகே உள்ள துரிஞ்சிகுப்பத்தை சேர்ந்த ராஜா கவுண்டர் மனைவி சாந்தி (வயது 48).

இவருடைய மகள் சாரதா (வயது 27) கடந்த 9 வருடங்களுக்கு முன் ஓகூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சத்தியமூர்த்திக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சரிதா தன் கணவரிடம் என் அம்மாவை பார்க்க அம்மா வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு கணவர் அம்மா வீட்டிற்கு நீ செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.

உடனே சாரதா மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து உள்ளார் உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார் அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்து விட்டார்.

போளூர் போலீசார் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News