கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, போளூர், சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு சேத்துப்பட்டு வட்ட செயலாளர் ஜான்சன், தலைமை தாங்கினார் வட்டத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுராமன், ஆகிய முன்னிலை வகித்தனர்.
கடந்த 24-ந்தேதி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேத்துப்பட்டு, தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
மேலும் 7 அம்ச கோரிக்கைகளை எந்த முடிவும் எடுக்காததை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் தாலுக்கா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பின்னர் சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 10 நாட்களுக்குள் உங்களுக்கு வழங்க வேண்டிய ஜமாபந்தி நிலுவை தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
பின்னர் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர் இதில் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.