உள்ளூர் செய்திகள்

போளூரில் உறியடி திருவிழா

Published On 2022-08-21 09:13 GMT   |   Update On 2022-08-21 09:13 GMT
  • கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்தது
  • ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்

போளூர்:

போளூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

போளூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் சாந்தி நடராஜன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் என் நரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போளூர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

யாதவர் பண்பாட்டு கழகம் சார்பில் உறியடி திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை யாதவர் பண்பாட்டு கழக தலைவர் ஏழுமலை, செயலாளர் ஜி வெங்கடேசன், பொருளாளர் ஜி கிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News