உள்ளூர் செய்திகள்
- ஏரிக்கரை ஓரமாக சென்ற போது விபத்து நடந்தது.
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா மங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45) விவசாயி. இவர் நேற்று மங்கலத்தில் இருந்து சோமாசிபாடி சாலை கானலாபாடி ஏரிக்கரை ஓரமாக டிராக்டரை ஓட்டிச் சென்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் ஏரியில் கவிந்தது.
இதில் சிக்கி படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.