உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.71 கோடி வசூல்

Published On 2023-01-26 15:12 IST   |   Update On 2023-01-26 15:12:00 IST
  • 320 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளியும் இருந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவி லுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று கிரிவலப்பாதை யில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.2 கோடியே 71 லட்சத்தி 96 ஆயிரத்து 869 உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தது.

மேலும் 320 கிராம் தங்கமும், 2கிலோ 684 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணி இணையதளத்தில் ஒளிபரப்பப் பட்டது.

Tags:    

Similar News