உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்

Published On 2022-10-15 08:19 GMT   |   Update On 2022-10-15 08:19 GMT
  • அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 50-வது ஆண்டு பொன்விழா நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்:-

வரும் 17-ந்தேதி அதிமுக 51-வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.

மேலும் 1972 முதல் தொடர்ந்து 50 ஆண்டுகளாக கட்சி பணி ஆற்றியவர்களுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியால் வழங்கப்பட உள்ளது.

இவர் அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், துணை செயலாளர் செல்வம், பொருளாளர் நைணாக்கண்ணு, இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில் குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பர்வதம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனி, மாவட்ட பேரவை துணைத் தலைவர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் தரணி, நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதா, கலியபெ ருமாள், சரவணன், கோவிந்தராஜ், ராமச்சந்திரன், தொப்புளான், ஸ்ரீதர்

ராகவன், மாவட்ட பிரதிநிதி சில்பிசஹானா, உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News