உள்ளூர் செய்திகள்
முதியவரை பிளேடால் வெட்டியவர் கைது
- முன்விரோதம் காரணமாக விபரீதம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 66). இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் விஜயகுமார் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது
இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விஜயகுமார், அய்யாசாமியை பிளேடால் வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த அய்யாசாமி சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.