உள்ளூர் செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

Published On 2022-09-30 15:06 IST   |   Update On 2022-09-30 15:06:00 IST
  • திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
  • வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கிளையூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 43), தொழிலாளி. இவர், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதியன்று விளையாடிக் கொண்டிருந்த 11 வயதுடைய சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். 20 ஆண்டுகள் சிறை இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிருஷ்ணமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தர விட்டார். இதையடுத்து அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News