உள்ளூர் செய்திகள்

இடிதாக்கி பெண் சாவு

Published On 2022-11-13 14:24 IST   |   Update On 2022-11-13 14:24:00 IST
  • நிலத்தில் தேங்கிய தண்ணீரை அகற்றியபோது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த தென்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சொர்ணம் (வயது 38).

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் நேற்று காலை வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற சென்றார்.

தொடர் மழை காரணமாக சொர்ணம் குடை பிடித்துக் கொண்டு வயலில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இடியுடன் கனமழை பெய்து.

இதில் திடீரென இடி தாக்கியதில் சொர்ணம் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் மற்றும் தெள்ளார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சொர்ணம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News