உள்ளூர் செய்திகள்

வீட்டில் தூங்கிய மருமகள் திடீர் மாயம்

Published On 2023-01-31 15:18 IST   |   Update On 2023-01-31 15:18:00 IST
  • மாமனார் புகார்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 25). இவருக்கும் பாப்பாந்தாங்கலை சேர்ந்த கலையரசி (22) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து சில நாட்களிலேயே தீபன் சக்கரவர்த்தி வேலை காரணமாக துபாய் சென்று விட்டார். கடந்த 24-ந் தேதி இரவு 8 மணிக்கு கலையரசி தூங்க சென்றார்.

மறுநாள் காலையில் அவரது மாமனார் பிச்சாண்டி மருமகளை எழுப்ப சென்றபோது அவரை காணவில்லை. தூங்குவது போல துணி தலையணை வைத்துவிட்டு அவர் எங்கேயோ சென்று விட்டார் என தெரிய வந்தது.

இதுகுறித்து கலையரசி மாமனார் பிச்சாண்டி பிரம்மதேசம் போலீசில் மருமகளை காணவில்லை என புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் பாபா வழக்கு பதிவு செய்து காணாமல் போன கலையரசியை தேடி வருகின்றார்.

Tags:    

Similar News