உள்ளூர் செய்திகள்
- பக்தர்கள் மடக்கி பிடித்தனர்
- போலீசில் விசாரணை
திருவண்ணாமலை:
தச்சம்பட்டு அருகே உள்ள அயல் ரெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது.
அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 52) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை திருடிக்கொண்டு ஓடினார். இதனை கண்ட அங்கிருந்த பக்தர்கள் அவரை மடக்கி பிடித்து தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கருவட்டாம்பாறை பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 22) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.