உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணிடம் அத்துமீறிய வழிபாட்டுத்தல ஊழியர் கைது

Published On 2022-07-07 16:06 IST   |   Update On 2022-07-07 16:06:00 IST
  • உடலில் தண்ணீரை தெளித்து துடைப்பது போல் துணகரம்
  • போலீசார் விசாரணை

தூசி:

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பல்லாவரம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.

இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி

அவர்கள் தங்களின் குழந்தைக்கு தண்ணீர் மந்திரித்து தெளிப்பதற்காக, அருகில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்துக்கு நேற்று முன்தினம் குழந்தையைத் தூக்கி சென்றனர். அங்கு, தண்ணீர் மந்திரித்துத் தெளிக்கும் ஊழியரான ஜார் கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த இளம்பெண்ணிடம் உனது கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு நீ மட்டும் உள்ளே வா என்றார்.

அதன்படி இளம்பெண் கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு தனது குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு வழிபாட்டுத்தலத்துக்குள் சென்றார்.

அப்போது வழிபாட்டுத் தல ஊழியர், உள்ளே சென்ற இளம்பெண் மீது தண்ணீரை தெளித்து, தொட்டு துடைப்பது போல் கபட நாடகமாடி அத்துமீறி நடக்க முயன்றதாகக், கூறப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து தனக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தை கணவரிடம் கூறினார்.

இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் தூசி போலீசில் புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்ப திவு செய்து, வழிபாட்டுத்தல ஊழியரை கைது செய்தார்.

Tags:    

Similar News