உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் சாவு

Published On 2022-07-12 14:35 IST   |   Update On 2022-07-12 14:35:00 IST
  • உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் குன்றுமேடு பகுதியை சேர்ந்தவர். கட்டிட மேஸ்திரி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் (19) தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த மாதங்களாக தமிழ்ச்செல்வனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிக்கை பெற்று வந்தார்.

சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் கடந்த 4ம்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். தமிழ்செல்வனை விட்டார். சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீசில் கணேசன் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News