உள்ளூர் செய்திகள்

ஆரணியில் தனியார் பள்ளி வாகனங்களை சப்-கலெக்டர் 2 முறை ஆய்வு செய்தார்.

தனியார் பள்ளி வாகனங்களை சப்-கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-31 09:08 GMT   |   Update On 2022-07-31 09:08 GMT
  • 2 முறை சோதனை செய்தனர்
  • 21 வயது முழுமையாகாத டிரைவர்கள் நீக்கம்

ஆரணி:

ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் உட்கோட்டத்தில் ஆரணி சேத்துப்பட்டு, போளுர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 42 தனியார் பள்ளிகளில் உள்ள 286 பஸ்களை ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறத்தில் உள்ள மைதானத்தில் ஆரணி உதவி-கலெக்டர் தனலட்சுமி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதவி-கலெக்டர் தனலட்சுமி கூறியதாவது:-

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொண்டதில் சிறிய, சிறிய குறைகள் உள்ளன என தெரிவித்த போது செய்தியாளர்கள் இதுசம்மந்தமாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

பின்னர் மீண்டும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து முதலுதவி, தீயணைப்பான், உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளதா என ஆய்வு செய்தார்.

மேலும் அரசின் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றவும் இந்த ஆய்வில் அறிவுறுத்தபட்டன.

மேலும் இந்த ஆய்வில் 21 வயது முழுமையாகாத ஓட்டுனர்களை நீக்கம் செய்தும் தகுதியில்லாத 2 பள்ளி வாகனங்களை மீண்டும் சரி செய்து ஆய்விற்கு உட்படுத்த உதவி-கலெக்டர் தனலட்சமி உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் தாசில்தார் பெருமாள் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News