உள்ளூர் செய்திகள்

பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம்

Published On 2022-06-28 10:06 GMT   |   Update On 2022-06-28 10:06 GMT
  • 10, 12-ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும்.
  • இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்பாடு.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்காக 28 விடுதிகளும், மாணவிகளுக்காக 13 விடுதிகளும் என மொத்தம் 41 பள்ளி விடுதிகள் உள்ளது. மேலும் 4 மாணவர்கள் விடுதிகளும், 4 மாணவிகள் விடுதிகளும் என மொத்தம் 8 கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் உள்ளது.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும்.

மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் மூலமாக அப்பகுதியில் அமைந்துள்ள விடுதிகளின் காப்பாளர்களிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை வருகிற ஜூலை மாதம் 31-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ண ப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 3 சதவீத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயில விண்ணப்பம் செய்யலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கலாம். எனவே மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News