உள்ளூர் செய்திகள்

மாணவி விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-02-23 09:15 GMT   |   Update On 2023-02-23 09:15 GMT
  • செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் விபரீதம்
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

வாணாபுரம் அருகே வாழ வச்சனூர் பகுதியைச் சேர்ந்த வர் தணிகாசலம். இவரது மகள் வர்ஷா (வயது 14). இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

வர்ஷா சம்பவத்தன்று வீட் டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த் துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவ ரது தாய் கண்டித்துள்ளார். தனால் மனவேதனை அடைந்த வர்ஷா வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு தாயிடம் கூறினார். இதனையடுத்து அவரை சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வர்ஷா

பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News