உள்ளூர் செய்திகள்

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் தேர்வு

Published On 2022-07-23 15:00 IST   |   Update On 2022-07-23 15:00:00 IST
  • 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பு
  • ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

செய்யாறு:

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜி.அசோக், ஆசிரியர்விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு வரவேற்றார்.

கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக சி. உமா மகேஸ்வரி, துணைத் தலைவராக எம் மகாலட்சுமி மற்றும் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஞானமணி சின்னதுரை, அகமத் மற்றும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News