உள்ளூர் செய்திகள்
- சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது துணிகரம்
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (32) மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு புதூர்மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து புதுப்பாளையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
திடீரென செல்போன் மூலம் அழைப்பு வந்தது. அதனை எடுத்து பேசுவதற்காக சாலையோரம் பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருட்டில் இருந்து வந்த மர்ம கும்பல் செல்வத்திடம் இருந்த செல்போன் மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதுகுறித்து செல்வம் நேற்று புதுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.