உள்ளூர் செய்திகள்
விவசாயி வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளை
- பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசபாக்கத்தை அடுத்த எர்ணாமங்கலம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 62), விவசாயி.
இவர், நேற்று அதே பகுதியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிக்காக வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.
வேலை முடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.3 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து கலசபாக்கம் போலீசில் சேகர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்த சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.