உள்ளூர் செய்திகள்

நிறைவு விழா நடந்த போது எடுத்த படம்.

வருவாய் தீர்வாயம் நிறைவு விழா

Published On 2022-06-18 15:23 IST   |   Update On 2022-06-18 15:23:00 IST
  • வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது
  • ஏராளமானோர் மனு அளித்தனர்

வந்தவாசி :

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பசலி வருவாய் தீர்வாயம் நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வினோத் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் வந்தவாசி வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டா மாற்றம் நத்தம் பட்டா நகல் இலவச வீட்டு மனை பட்டா வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி உழவர் பாதுகாப்பு அட்டை குடும்ப அட்டை வேளாண்மைத்துறை திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு வந்தவாசி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

விழாவில் முருகானந்தம் சமூக பாதுகாப்பு தாசில்தார் சுபாஷ்சந்தர், மருத்துவ அலுவலர் சிவப்பிரியா, வேளாண்மை அலுவலர் குமரன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தெய்வசிகாமணி, உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News