உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் கலெக்டர் முருகேஷ் தேசிய கொடி ஏற்றினார்.

திருவண்ணாமலையில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்

Published On 2023-01-26 14:58 IST   |   Update On 2023-01-26 14:58:00 IST
  • கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்
  • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கலெக்டர்முருகேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை வானில் பறக்கவிட்டார்.

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷனி, கூடுதல் கலெக்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழாவில் தலைமை காவலர்கள் 50 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார், தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு சால்வை அணிவத்து மரியாதை செலுத்தினார், பின்னர் வருவாய்த்துறை, பழங்குடியினர் நலன், கூட்டுறவுத்துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 34 பயனாளிகளுக்கு ரூ.32,16,449 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

Similar News