உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 7 பேர் பணியிட மாற்றம்

Published On 2023-03-27 09:29 GMT   |   Update On 2023-03-27 09:29 GMT
  • கலெக்டர் உத்தரவு
  • பதவி உயர்வு பெற்றுள்ளனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தர விட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாபு துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த லட்சுமி போளூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா திருவண்ணா மலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வீடுகள்), போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலராகவும்.

அதேபோல் திருவண்ணாமலை மாநில ஊரக வாழ்வாதார மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பாண்டியன் கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), போளூர் வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கோபு புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், விடுப்பில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு போளூர் வட்டார வளர்ச்சி அலுவல ராகவும், திருவண்ணாமலை வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பிரிதிவிராஜன் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News