உள்ளூர் செய்திகள்

பெருமாள் கோவிலில் மழை வெள்ளம் புகுந்தது

Published On 2022-11-13 08:57 GMT   |   Update On 2022-11-13 08:57 GMT
  • கோவிலை சுற்றி வர பக்தர்கள் மிகவும் சிரமம்
  • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் பகுதியில் ஊரிண் நடுவே லட்சுமி நாராயணன் பெருமாள் கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷேகம் முடிந்து பல வருடங்களாகிறது.மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை கோயில் என்பதால் யாரும் முயற்சி செய்யவில்லை. இங்கு கோபுரங்கள் மீது செடி கொடிகள் வளர்ந்து வருகிறது.

இதனுள்ளே ஆஞ்சநேயர், ஐயப்பன், விநாயகர், ஆண்டாள், நவக்கிரகங்கள், துர்க்கை அம்மன் சன்னதி தனித்தனியே உள்ளது. வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் ராகுகால பூஜை வழிபாடு செய்வர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குருசாமிகளை அழைத்து வந்து மாலை அணிந்து செல்வர்.

ஐயப்ப பக்தர்களின் பொது பூஜை செய்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இவ்வளவு வசதிகள் இருந்தும் இக்கோயிலில் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் தெருவை விட கோயில் உயரம் சற்று குறைவாக உள்ளது.

இந்த நிலையில் கண்ணமங்கலம் பகுதியில் பெய்த மழையால் வெள்ளம் கோவிலுக்குள் புகுந்தது.

இதனால் மழைநீர் வெளியேற வழியில்லை என்பதால் அங்கு குட்டை போல தேங்கி நிற்கிறது. இங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் கோவிலை சுற்றி வர மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News