உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி ஒருவர் பலி

Published On 2022-09-05 09:31 GMT   |   Update On 2022-09-05 09:31 GMT
  • சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
  • சாலையில் நடந்துசென்ற போது விபரீதம்

திருவண்ணாமலை:

கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளுவர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது55) என்பவர் நேற்று போளூரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது படியம்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே சாலை ஓரம் இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் நேரில் சென்று இறந்து கிடந்த முருகன் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News