- சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த முள்ளிப் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வர் சேது ரத்தினம் (வயது 77). இவர் கடந்த 20-ந் தேதி சைக் கிளில் ஆரணி பஜாருக்கு வந்து கொண்டிருந்தார்.
காந்தி ரோட்டில் உள்ள தியேட்டர் அருகாமையில் வந்தபோது பின்னால் பைக்கில் வந்த நபர் சேதுரத்தினம் ஓட்டி சென்ற சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதினார்.
பின்னர் அங்கிருந்து அந்த நபர் வேகமாக பைக்கில் சென்று விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த சேதுரத்தினத்தை அந்த வழியாக சென்றார்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மகன் அருணாசலம், ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த சேதுரத்தினத்திற்கு காந்திமதி என்ற மனைவியும், 3 மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.