உள்ளூர் செய்திகள்

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இரவில் அம்மன் பாரிவேட்டை நடந்தது.

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி பாரிவேட்டை

Published On 2022-10-06 09:36 GMT   |   Update On 2022-10-06 09:36 GMT
  • விஜயதசமி உற்சவம் நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவில் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆயுத பூஜை விழாவில் செயல் அலுவலர் சிவஞானம், முன்னாள் அற காவலர் குழுத்தலைவர் ஆர்.வி.சேகர் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நவராத்திரி விழா முன்னிட்டு நடந்த நாட்டிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நாட்டியப்பள்ளி மாணவிகளுக்கு செயல் அலுவலர் சிவஞானம் சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும் விஜய் தசமி 10-ம் நாளான நேற்று அம்மனுக்கு பாரிவேட்டை உற்சவம் நடந்தது.

இதில் கோவில் மேலாளர் மகாதேவன், கணக்காளர் சீனிவாசன், ஓதுவார் சிவக்குமார், எழுத்தர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை கோவில் தர்மேஸ்வர சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல் அய்யம்பாளையம் கிராமத்தில் நேற்று ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராய பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா முன்னிட்டு 10-ம்நாள் விஜயதசமி உற்சவம் நடைபெற்றது.

இதைமுன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் திருவீதி உலாவும், தொடர்ந்து பாரிவேட்டையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News