உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை அருகே கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த மல்லவாடி மாட்டு வாரச்சந்தை தொடங்கிய போது எடுத்த படம்.

மல்லவாடி மாட்டு சந்தை தொடங்கியது

Published On 2023-03-20 09:56 GMT   |   Update On 2023-03-20 09:56 GMT
  • கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது
  • சந்தைக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி ஊராட்சியில் நடைபெற்று வந்த மாட்டு வாரச்சந்தை கொரோனா தொற்றினால் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தன.

இவை நேற்று முதல் மல்லவாடி சந்தை மேட்டு பகுதியில் தொடங்கியது. சந்தை ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுகின்றன. இந்த சந்தையில் மாடு, ஆடு, கோழி விற்பனை மற்றும் காய்கறிகள் உட்பட பல்வேறு விதமான கடைகளும் இங்கு வைக்கப்பட்டு வியாபாரம் செய்யத் தொடங்கி யுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் நேற்று முதல் தொடங்கியதால் சந்தைக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக ஒரு கன்று குட்டியும், 2-வது பரிசாக ஆட்டுக்குட்டியும், 3-வது பரிசாக கோழியும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News