உள்ளூர் செய்திகள்
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Tiruvannamalai News Lottery ticket seller arrestசேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேத்துப்பட்டு வெங்கடாஜலபதி தெருவை சேர்ந்த விநாயகம் (வயது 53) என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.