உள்ளூர் செய்திகள்

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

Published On 2023-01-31 09:44 GMT   |   Update On 2023-01-31 09:44 GMT
  • திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
  • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

திருவண்ணாமலை:

போளூர் அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45), கூலி தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி அவரது வீட்டிற்கு டி.வி. பார்க்க வந்த 4 வயதுடைய சிறுமியிடம் ஏழுமலை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பாட்டி சிறுமியை தேடி சென்றார். அப்போது நடந்த சம்பவம் குறித்து சிறுமி அவரது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.

அப்போது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழுமலைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து ஏழுமலையை போலீசார் வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News