உள்ளூர் செய்திகள்

பைக் மீது வேன் மோதி லேப் டெக்னீசியன் பலி

Published On 2023-04-13 14:34 IST   |   Update On 2023-04-13 14:39:00 IST
  • வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் புதிய காலனி சேர்ந்தவர் சூரியா (வயது 22). இவர் வந்தவா சியில் உள்ள ரோட்டரி சங்க இரவு நேர மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார்.

இவர் திங்கள்கிழமை காலை பணி முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கீழ்சாத்தமங்கலம் சாலை-புதிய புறவழிச்சாலை சந்திப்பில் செல்லும்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சூரியாவை அந்தப் பகுதியிலி ருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சூரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகு றித்து சூரியாவின் தந்தை பிச்சை அளித்த புகாரின் பேரில் பொன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News