உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி விழாவில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய போது எடுத்த படம்

சேத்துப்பட்டில் ஜமாபந்தி நிறைவு விழா

Published On 2022-06-09 15:01 IST   |   Update On 2022-06-09 15:01:00 IST
  • 747 பேர் மனு அளித்தனர்.
  • 134 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1431ஆம் பசலிகான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.இதில் தச்சாம்பாடி, நெடுங்குணம், பெரியகொழப்பலூர், தேவிகாபுரம், ஆகிய 4 பிர்காகளுக்கு 4நாட்கள் ஜமாபந்தி விழா நடந்தது.

இதில் பல்வேறு கோரிக்கைகளுக்கு 747 பேர் மனு அளித்தனர். இந்த மனுக்களை தணிக்கை செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு மாவட்ட சமூக பாதுகாப்பு தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன், தலைமை தாங்கினார்.சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சமூக பாதுகாப்பு தாசில்தார் தாசில்தார் குமரவேல், வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ்பாபு, சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரும் மண்டல துணை தாசில்தார் சரவணன், வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேத்துப்பட்டு ஒன்றிய குழு தலைவர் ராணிஅர்ஜுனன். பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஆகியோர் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்தி றனாளிகளுக்கான உதவித் தொகை, பட்டா பெயர் மாற்றம், நத்தம் தூய சிட்டா, வண்டல் மண் அனுமதி, இ நகல், வேளாண் உழவர் துறை மூலம் தெளிப்பான், உள்ளிட்ட 134 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.

விழாவில் சேத்துப்பட்டு ஒன்றிய திமுக செயலாளர் எழில்மாறன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், சேத்துப்பட்டு திமுக நகர செயலாளர் முருகன், சேத்துப்பட்டு வேளாண்மை அலுவலர் இலக்கியா, வருவாய் ஆய்வாளர்கள் கன்னியப்பன், சுப்பிரமணியன், ஹேமலதா, ராதாகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்துறை ஊழியர்கள், கிராமஉதவியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர், முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜான்சன், நன்றி கூறினார்.

Tags:    

Similar News