உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளி பஸ்கள் ஆய்வு

Published On 2023-05-18 12:32 IST   |   Update On 2023-05-18 12:32:00 IST
  • 6 வாகனங்கள் அனுமதி ரத்து
  • முதலுதவி, தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகளின்றி இருந்ததால் நடவடிக்கை

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குபட்ட ரகுநாதபுரம் கூட்ரோடு அருகில் ஆரணி மோட்டார் வாகன அலுவலகம் இயங்கி வருகினறது.

ஆரணி போளுர் செய்யார் சேத்பட் உள்ளிட்ட பகுதிகளில் 45 தனியார் பள்ளி உள்ளன. இந்த பள்ளி பஸ்களை மோட்டார் வாகன அலுவலர் சரவணன், ஆய்வாளர் முருகேன் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இதில் 353 வாகனங்களில் முதல்கட்ட மாக 230 தனியார் பள்ளி வாகனங்களில் 22 வாகனங்கள் ஆய்வு செய்தனர். முதலுதவி தீயணைப்பான் உள்ளிட்ட வசதிகளின்றி உள்ள 6 வாகனங்கள் அனுமதி ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மற்ற வாகனங்களை தொடர்ந்து மோட்டார் வாகன அலுவலர்கள் தணிக்கையில் ஈடுபட்டனர். தாசில்தார் மஞ்சுளா, ஆரஞ்ச் பள்ளி சேர்மன் சிவக்குமார், வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி சங்கத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News